Latest Government Jobs and updates

Thursday

TNPSC Tamil study material part-B Thirukkural


                                               ஒப்புரவறிதல்

                                                    அறத்துப்பால்

                                           அதிகாரம்(22)

                 அறம்-இல்லறவியல்  
                                              
1.கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு.
விளக்கம்: மழை பொழியும் மேகத்திற்கு நாம் கைம்மாறு செய்வது இல்லை. அதுபோல,பிறர்க்கு உதவி செய்து விட்டு அவர்களிடம் கைம்மாறு எதிர்பார்க்ககூடாது.

2.தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
விளக்கம்: ஒருவன் தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து சேர்த்த செல்வத்தை தான் மட்டும் அனுபவிக்காமல் பிறர்க்கு கொடுத்து உதவ வேண்டும்.

3.புத்தே ளுலகத்து மீண்டும் பெறலரிதே
ஒப்புரவி னல்ல பிற.
விளக்கம்: பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல இவ்வுலகில் வேறு ஒன்றும் இல்லை.

4.ஒத்த தறிவானுயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
விளக்கம்: பிறர்க்கு உதவி செய்து வாழ்பவரை உயிர் உள்ளவராக மதிப்பர்.உதவி செய்யாதவரை இறந்த பிணமாகக் கருதுவர்.

5.ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
விளக்கம்: மக்களுக்கு பயன்படும் கிணற்றில் நீர் நிறைந்து இருப்பது போல பிறர்க்கு உதவுபவரின் செல்வமும் குறையாது.

6.பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றாற் செல்வம்
நயனுடை யான்கட் படின்.
விளக்கம்: ஊர் நடுவே இருக்கும் மரத்தின் பழம் எல்லார்க்கும் பயன்படுவது போல, உதவி செய்பவரின் செல்வமும் பயன்படும்.

7.மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்.
விளக்கம்: பிறர்க்கு உதவி செய்பவனின் செல்வமானது மற்றவர்க்கு எல்லா துன்பங்களையும் போக்கும் மருத்து மரமாகப் பயன்படுகிறது.

8.இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.
விளக்கம்: பிறர்க்கு உதவி செய்யும் குணம் உடையவர் தன்னிடம் பொருள் இல்லாத வறுமையாக இருந்தாலும் உதவி செய்ய தயங்கமாட்டார்கள். 
        
9.நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு.
விளக்கம்: பிறர்க்கு உதவும் இயல்பு உடையவர் உணவு பொருள் இல்லாத நிலையை வறுமை என்று கருதமாட்டார்.பிறர்க்கு உதவ முடியாத நிலையை வறுமை என்று கருதி வருந்துவர்.

10.ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.
விளக்கம்: பிறர்க்கு உதவுவதால் தன் செல்வம் அழியும் நிலை வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் தன்னை விற்றாவது பிறர்க்குஉதவி செய்பவருக்கு புகழ் கிடைக்கும்.

No comments:

Post a Comment