Showing posts with label TNPSC Tamil Group 2 study material.. Show all posts
Showing posts with label TNPSC Tamil Group 2 study material.. Show all posts

Monday

பாரதிதாசன்

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார் தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.

பாரதிதாசன்

இயற்பெயர் : கனகசுப்புரத்தினம்

பெற்றோர் : கனகசபை, இலக்குமி அம்மாள்

காலம் : 29/04/1891 – 21/04/1964

சிறப்புப்பெயர்கள் : பாவேந்தர் புரட்சிக்கவிஞர், புரட்சிக்கவிஞர், இயற்கைகவிஞர்.

நூல்கள் : பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, குறிஞ்சித் திட்டு,சேர தாண்டவம், எதிர்பாராத முத்தம், மணிமேகலை வெண்பா, இரணியன், இளைஞர் இலக்கியம், சஞ்சீவி பர்வதத்தின் சாரல், இசையமுது, இருண்ட வீடு, பிசிராந்தையார், படித்த பெண்கள், செளமியன், தமிழியாக்கம், தமிழச்சியின் கத்தி, காதல் நினைவுகள், அமைதி, கண்ணகி புரட்சிக் காப்பியம், நல்ல தீர்ப்பு, தமிழ் இயக்கம்.

குறிப்பு :

F தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற மொழிகளில் புலமை பெற்றார்.

F பாரதி மீது கொண்ட பற்றினால் தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.

F புதுவை அரசு கல்லூரியில் இவர் தமிழாசிரியராகவும் பணி செய்துள்ளார்.

F குயில்,பொன்னி போன்ற இதழ்களை நடத்தினார்.

F பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை கவிதை வடிவில் வெளியிட்டார்.

F இவரது பாடல்கள் செக் மொழியில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.

F இவருடைய பிசிராந்தையார் நாடகம் சாகித்திய அகாடெமி விருது பெற்றுள்ளது.

F தமிழக அரசு பாரதிதாசனுக்கு 1991 ல் நூற்றாண்டு விழா கொண்டாடியது.

F திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தொடக்கப்பட்டது.

F இவர் பாடிய வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே என்ற பாடலை புதுவை அரசு தமிழ் வாழ்த்திப் பாடலாக ஏற்றிக் கொண்டுள்ளது.

மேற்கோள் :

è எங்கெங்கும் காணினும் சக்தியடா.........

è வாடாதப் பூப்போன்ற மங்கை நல்லாள்........

è இருட்டறையில் உள்ளதடா உலகம்.........

è ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்.........

è எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான........

è பொருளாளி திருடர்களை விளைவிக்கின்றான்..........

è எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்........

è கூடத்திலே மனப் பாடத்திலே............

è தமிழுக்கு அமுதென்று பேர்...........

சிறப்பு :

v  தமிழ்நாட்டின் இரசூல் காம்சதோவ் என்று பாராட்டப்பெற்றார். (இரசூல் காம்சதோவ் என்றால் உருசிய நாட்டில் மாககவிஞர் என்று பொருள்.)

v  முதுபெரும்புலவரிடம் தமிழ் இலக்கண இலக்கியத்தைக் கற்றுக் கொண்டார்.

v  இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.

v  தமிழக அரசு இவருடைய படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

v  மேலும் ஆண்டு தோறும் சிறந்த கவிஞர்களுக்கு பாவேந்தர் விருது வழங்கப்படுகிறது.

v  அறிஞர் அண்ணாவின் முயற்சியால் ரூ.2500 பொற்கிழியும் புரட்சிக்கவிஞர் என்ற விருதையையும் 1946 ல் பெற்றார்.

v  திரு.வி.க“எனக்கு குயிலின் பாடலும், மயிலின் ஆடலும், வண்டின் யாழும், அருவியின் முழுவும் இனிக்கும், பாரதிதாசன் பாட்டும் இனிக்கும்.”

v  சிதம்பரநாத செட்டியார்அவருடைய பாடல்களை படிக்கின்ற அன்னியனும் தமிழனாகி விடுவான்.

v  புதுமைபித்தன்அறிவுக் கோவிலைக் கட்டி அதில் நம்மை குடியேற்ற விரும்புகின்ற அறிஞன்.

v  ராஜகோபாலன்பாரதிக்கு பிறகு தமிழ்நாட்டில் உள்ள ஓர் உண்மையான கவிஞன்.

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....