Saturday

பசுவய்யா

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

பசுவய்யா

இயற்பெயர் : சுந்தர ராமசாமி

பிறந்த ஊர் : நாகர்கோவிலில் உள்ள மகாதேவர் கோவில்   

காலம் : 30/5/1931 – 14/10/2005  

படைப்புகள் : நடுநிசி நாய்கள், ஜே.ஜே. சில குறிப்புகள், காற்றில் கரைந்த பேரோசை, யாரோ ஒருவனுக்காக, ஒரு புளியமரத்தின் கதை, அக்கரைச் சீமையில், பிரசாதம், வாழ்க சந்தேகங்கள், மூன்று நாடகங்கள், வானமே இளவெயிலே மரச்செறிவே, இறந்தகாலம் பெற்ற உயிர், குழந்தைகள் பெண்கள் ஆண்கள், தண்ணீர் அடைக்கலம், அகம், ஆளுமைகள், மதிப்பீடுகள், அந்த ஐந்து நிமிடங்கள்,லல்வு, கைக்குழந்தை, செங்கமலமும் ஒரு சோப்பும், கிடாரி, பக்த துளசி, ஒரு நாய், ஒரு சிறுவன், ஒரு பாம்பு, ஸ்டாம்பு ஆல்பம், லீலை, தயக்கம், பள்ளம், டால்டாய்ஸ் தாத்தாவின் கதை.          

குறிப்பு :

Ø  இவர் சாந்தி, சதங்கை, ஞானரதம், தீபம், இலக்கியவட்டம், கசடதபற, போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.

Ø  தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன், தோட்டியின் மகன் என்ற இரண்டு புதினங்களையும் மலையாளத்திலிருந்து மொழி பெயர்ந்துள்ளார்.

Ø  இவருக்கு குமரன் ஆசான் நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது.

Ø  தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருதினையும் 2001 ல் இவர் பெற்றுள்ளார்.

Ø  இவருக்கு 2004 ல் கதா சூடாமணி விருது வழங்கப்பட்டது.  

Ø  இவரை புதுக்கவிதையின் துருவ நட்சத்திரம் என்றும் அழைத்தனர்.

Ø  இவருக்கு சுந்தரராமசாமி என்ற பெயரில் தமிழ் கணினிக்கான விருது, இளம் படைப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

Ø  இவர் காலச்சுவடு என்ற பத்திரிக்கையை 1988 ல் நடத்தியுள்ளார்.    

Ø  தொலைவிலிருந்து கவிதைகள் இவரது மொழி பெயர்ப்பு நூல் ஆகும்.

Ø  இவர் மலையாளம், ஆங்கிலம், தமிழ் போன்ற மொழிகளில் நூல்களை மொழி பெயர்ந்துள்ளார்.

Ø  இவர் நினைவோடைகள் என்ற தலைப்பில் நாகராஜன், க.நா.சுப்பிரமணியம், தி.ஜானகிராமன், பிரமிள், ஜீவா, கிருஷ்ணன்நம்பி, சி.த.செல்லப்பா ஆகியோரைப் பற்றி எழுதியுள்ளார்.

மேற்கோள் :

v  நகத்தை வெட்டியெறி………………..

Thursday

தருமு சிவராமு

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

தருமு சிவராமு

இயற்பெயர் : சிவராமலிங்கம்

பிறந்த ஊர் : இலங்கையில் உள்ள திரிகோண மலை  

காலம் : 20/4/1939 – 6/1/1997

சிறப்புப்பெயர்கள் : பிரமிள், பானுசந்திரன், அரூப்சிவராம்  

படைப்புகள் : கண்ணாடி உள்ளிலிருந்து, கைப்பிடியளவு கடல், மேல்நோக்கிய பயணம், பிரமிள் கவிதைகள், மார்க்சும் மார்க்ஸீயமும், நட்சத்ரவாசி, ஆயி, பிரசன்னம், பிரமிள் படைப்புகள், லங்காபுரிராஜா, கிசுகிசு, சாமுண்டி, கருடனூர் ரிப்போர்ட், அங்குலிமாமா, நீலம், அசரீரி, பாறை, கோடாரி, சந்திப்பு, யாழ்கவிதைகள், சூரியன் தகித்த நிறம், காலவெளிக்கவிதை, எதிர்ப்புச்சுவடுகள், தியானதாரா, வானமற்றவெளி, சீறிலங்காவின் தேசிய தற்கொலை, வெயிலும் நிழலும், பாதையிலா பயணம், பீட்டர் வோர்ஸ்லி, விடுதலையும் கலாச்சாரமும்.        

குறிப்பு :

Ø  இவர் இலக்கையில் பிறந்து சிறுவயதிலேயே சென்னையில் வந்து குடியேறியுள்ளார்.

Ø  சி. சு. செல்லப்பா இவரை படிகச் சிற்பி என்று கூறியுள்ளார்.

Ø  இவரை மறுமலர்ச்சி கால புதிக்கவிஞர் என்றும் அழைத்தனர்.

Ø  நியூயார்க் தமிழ்ச்சங்கம் இவருக்கு புதுமைப்பித்தன் விருதை 1996 ல் வழங்கியது.   

Ø  புதுமைப்பித்தன் வீறு என்ற விருதை கும்பகோணம் நீலக்குயில் வழங்கியது.

Ø  இவர் இளம் வயதிலே மெளனியின் கதைத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதியுள்ளார்.

Ø  தமிழின் மாமேதை என்று இவரை தி. ஜானகிராமன் பாராட்டியுள்ளார்.

மேற்கோள் :

v  கரித்துண்டு ஒன்றுக்கு......................

v  இறகு ஒன்று காற்றின்......................  

Wednesday

சி.சு.செல்லப்பா

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் –தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

சி.சு.செல்லப்பா

பிறந்த ஊர் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு  

காலம் : 29/9/1912 – 18/12/1998

படைப்புகள் : ஜீவனாம்சம், வாடிவாசல், சுதந்திர தாகம், சரசாவின் பொம்மை, மணல் வீடு, அறுபது, வெள்ளை என்ற ஐந்து தொகுதிகள், சத்தியாக்ரகி, முறைப்பெண், மாற்று இதயம், இன்று நீ இருந்தால், இலக்கியத் திறனாய்வு, எனது சிறுகதைகள், ந. பிச்சமூர்த்தி கதைகள், புதுக்குரல்கள், தமிழ் இலக்கிய விமர்சனம், தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது.

குறிப்பு :

Ø  இவர் கல்லூரி படிக்கும் போது காந்தியின் மீது கொண்ட ஈர்ப்பினால் விடுதலை போராட்டத்தில் எல்லாம் கலந்துக் கொண்டார்.

Ø  இவர் தினமணி கதிரிலும் பணி செய்துள்ளார்.

Ø  சுதந்திர சங்கு இதழை தொடங்கி அதனை மணிக்கொடி என்பதில் வெளியிட்டார்.

Ø  மணிக்கொடி, கலாமோகினி இதழ்கள் வலுவற்ற நிலையில் அவற்றிற்கு உறுதுணையாக வந்தது இவருடைய எழுத்து என்ற இதழ்.

Ø  எழுத்து என்ற இதழ் தமிழ்ச் சிறுபத்திரிக்கைகளின் முன்னோடியாக திகழ்ந்தது.  

Ø  சுதந்திர தாகம் என்ற புதினத்திற்கு 2001 ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.   

Friday

ந.பிச்சமூர்த்தி

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் –தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

ந.பிச்சமூர்த்தி

இயற்பெயர் : ந. வேங்கட மகாலிங்கம்  

பிறந்த ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்  

காலம் : 15/8/1900 – 4/12/1976

புனைபெயர்கள் : பிச்சு, ந. பி

படைப்புகள் : கிளிக்குஞ்சு, பூக்காரி, வழித்துணை, பிச்சமூர்த்திக் கவிதைகள், காட்டுவாத்து, வழித்துணை, புதுக்குரல்கள்.   

குறிப்பு : 

Ø  இவரை புதுக்கவிதையின் விடிவெள்ளி என்றும் புதுக்கவிதையின் பிதாமகன் என்றும் அழைபர்.

Ø  இவர் மணிக்கொடிக்காலம் எழுத்துக்காலம் போன்ற இருகாலத்திலும் புதுக்கவிதைகளைப் படைத்துள்ளார். 

Ø  இவர் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார் மற்றும் கோவில் நிர்வாக அலுவலராகவும் பணிச் செய்துள்ளார்.

Ø  இவர் நவஇந்தியா என்ற பத்திரிக்கையில் துணை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

Ø  இவர் கதைகள், மரபுக்கவிதைகள், புதிக்கவிதைகள், ஓரங்கநாடகங்கள் போன்றவற்றை எழுதும் பணியை செய்துள்ளார்.

Ø  இவருடைய முதல் சிறுகதை விஞ்ஞானத்திற்குப் பலி இது கலைமகளில் வெளிவந்துள்ளது.

Ø  இவருடைய முதல் கவிதை காதல் இது 1934 ம் ஆண்டு வெளிவந்துள்ளது. இதனை பிக்க்ஷி என்ற புனைப்பெயரில் எழுதியுள்ளார்.  

Ø  இவருடைய முதல் ஓரங்க நாடகம் புதுமைப் பெண் என்பது இது கலைமகள் பத்திரிக்கையில் வெளிவந்தது.  

Ø  இவர் முதலில் சிறுகதை எழுத்தாளராக அறிமுகம் ஆகி பின் புதுக்கவிதைக்கு வந்துள்ளார்.

Ø  இவர் முதன்முதலில் ஆனந்தா என்ற சிறுகதையை மணிக்கொடியில் வெளியிட்டுள்ளார்.  

Ø  குடும்ப இரகசியம் என்ற குறுநாவலை கலைமகளில் வெளியிட்டுள்ளார்.  

Ø  ஹனுமான், நவ இந்தியா போன்ற இதழ்களில் பணியாற்றியுள்ளார்.

Ø  பாரதிக்கு பிறகு கவிதை வடிவில் திருப்பம் கொண்டு வந்தது இவருடைய படைப்புகள் ஆகும்.

Ø  இவர் வால்ட்விட்மன், பாரதி போன்றவரை முன்னோடியாக வைத்து திகழந்தவர்.

Ø  இவருடைய காட்டுவாத்து என்ற கவிதை தொகுப்பு 35 கவிதைகளைக் கொண்டது ஆகும்.

Ø  கலைமகள் என்ற பத்திரிக்கையில் சிறுகதை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

Ø  இவரது முள்ளும் ரோசாவும் என்ற சிறுகதை கலைமகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது.

Ø  மணிக்கொடி, கலாமோகினி, கிராம ஊழியன் போன்ற இதழ்களில் கவிதை எழுதியுள்ளார்.

Ø  இவருடைய கிளிக்கூண்டு என்ற கவிதை தினமணிக்கதிரில் வெளிவந்துள்ளது. அதே சமயம் மணிக்கொடியில் ஊர்க்குருவி என்ற கவிதையும் வெளியாகி இருந்தது.

Ø  இவருடைய உயிர்மகள் என்ற காவியம் அகலிகை என்ற கதைக்கு புத்துயிர் கொடுத்து எழுதப்பட்டது ஆகும்.

Ø  இவரது எழுத்துநடையை வருணித்து கூறியவர் தி. க. சிவசங்கரன்.  

Ø  இவர் குழந்தைகளுக்கு என்று 10 கதைகளின் தொகுப்பை “காக்கையும் கிளிகளும்“என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.                     

மேற்கோள் :

v  வாழ்க்கையும் காவிரி அதிலெங்கும் கிளிக்கூண்டு………….

v  முண்டி மோதும் துணிவே இன்பம்…………

பசுவய்யா

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....