Latest Government Jobs and updates

Monday

TNPSC Tamil New Syllabus 2022 - Part II

 TNPSC Tamil New Syllabus

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

கட்டாயத் தமிழ்  மொழி தகுதித் தேர்விற்கான திட்டம், பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (கொள்குறி வகை)

 

குறிப்பு:-

தொகுதி-VI

(வனத் தொழில் பழகுநர்)

தொகுதி-VIIA

(செயல் அலுவலர், நிலை-I, இந்துசமய அறநிலையத் துறை)

மற்றும் இதர ஒரு நிலை கொண்ட போட்டித் தேர்வுகள்


கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்விற்கான பாடத்திட்டம்

(கொள்குறி வினாவிற்கான தலைப்புகள்)


           பத்தாம் வகுப்பு தரம்

 

1. பிரித்தெழுதுதல் / சேர்த்தெழுதுதல்.

2. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்.

3. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.

4. பிழை திருத்தம் (i) சந்திப்பிழையை நீக்குதல் (ii) மரபுப் பிழைகள்,

வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்.

5. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.

6. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்.

7. ஒரு பொருள் தரும் பல சொற்கள்.

8. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்.

9. வேர்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று, வினையச்சம்,

வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை / உருவாக்கல்.

10. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்.

11. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்.

12. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்.

(.கா.) குவிந்து-குவித்து

13. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.

14. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் - தன்வினை,

பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக்

கண்டெழுதுதல்.

15. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத்

தேர்ந்தெழுதுதல்

16. அலுவல் சார்ந்த சொற்கள் (கலைச் சொல்)

17. விடை வகைகள்.

18. பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல் (.கா.) கோல்டு பிஸ்கட்தங்கக் கட்டி.

19. ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக (.கா.) தஞ்சாவூர்தஞ்சை

20. நிறுத்தற்குறிகளை அறிதல்.

21. பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு (வாரான்வருகிறான்).

22. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்.

23. பொருத்தமான காலம் அமைத்தல்

(இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்).

24. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.

25. சரியான இணைப்புச் சொல்

(எனவே, ஏனெனில், ஆகையால், அதனால், அதுபோல).

26. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க.

27. இருபொருள் தருக.

28. குறில்நெடில் மாற்றம், பொருள் வேறுபாடு.

29. கூற்று, காரணம்சரியா? தவறா?

30. கலைச் சொற்களை அறிதல் :-

.கா. – Artificial Intelligence – செயற்கை நுண்ணறிவு

Super Computer - மீத்திறன் கணினி

31. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்

32. சொற்களின் கூட்டுப் பெயர்கள் (.கா.) புல் புற்கள்

33. சரியான தொடரைத் தேர்ந்தெடுத்தல்

34. பிழை திருத்துதல் (ஒரு-ஓர்)

35. சொல்பொருள்பொருத்துக

36. ஒருமை - பன்மை பிழை

37. பத்தியிலிருந்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு.

Sunday

TNPSC Tamil - இரட்டுற மொழிதல்

 இரட்டுற மொழிதல்  

          (Source TN Textbook)

1. கீரைப்பாத்தியும் குதிரையும்

 கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்

வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டப்போய்

மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்

ஏறப் பரியாகு மே

பாடல் விளக்கம்:

 கீரைப்பாத்தியில்

       மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர். மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர். வாய்க்காலில் மாறி மாறி நீர் பாய்ச்சுவர். நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும்.

 

குதிரை

      வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும். கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லும்; எதிரிகளை மறித்துத் தாக்கும்; போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.

     இக்காரணங்களால் கீரைப் பாத்தியும், ஏறிப் பயணம் செய்யும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும்.

2. ஆழிக்கு இணை

 

முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்

மெத்த வணிகலமும் மேவலால் - நித்தம்

அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு

இணைகிடந்த தேதமிழ் ஈண்டு

 

பாடல் விளக்கம்:

  தமிழ் :  

            தமிழ், இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது; முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது; ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப்

பெற்றது; சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.

கடல் :

        கடல், முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது; வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று

வகையான சங்குகளைத் தருகிறது; மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது; தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது.