Showing posts with label Udumalai Narayana kavi TNPSC New Syllabus Study Materials 2024. Show all posts
Showing posts with label Udumalai Narayana kavi TNPSC New Syllabus Study Materials 2024. Show all posts

Wednesday

உடுமலை நாராயண கவி

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

மரபுக் கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.

உடுமலை நாராயண கவி

இயற்பெயர் : நாராயணசாமி  

பெற்றோர் : கிருஷ்ணசாமிசெட்டியார், முத்தம்மாள்    

பிறந்த ஊர் : கோயம்புத்தூரில் உள்ள உடுமலைப்பேட்டை

காலம் : 25/9/1899 - 23/5/1981

சிறப்புப்பெயர்கள் : பகுத்தறிவு கவிராயர், கலைமாமணி, கவிவாணர், பெரியார் பெருந்தொண்டர்.              

குறிப்பு :

Ø  நாட்டுப்புறப் பாடல் மொட்டுகளைத் திரைபடத்திற்கு அறிமுகம் செய்தவர்.

Ø  கலைவாணர் என. எஸ். கிருஷ்ணவால் திரை உலகத்திற்கு வந்தார்.

Ø  இவர் நாடகங்கள் உரையாடல்கள் பாடல்கள் என பல  எழுதியுள்ளார்.

Ø  இவர் திரைப்பட ஆசிரியரும் நாடக எழுத்தாளரும் ஆவார்.

Ø  கிராமியக் கலைகளிலும் நாடகக் கலைகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

Ø  சுதந்திரப் போராட்டம் இவரை தேசப்பற்று பாடல்களை எழுத தூண்டியது.

Ø  இவருடைய 25 வது வயதில் கதர்க்கடை ஒன்றை நடத்தி வந்தார். அதனை ஊர் ஊர்ராக எடுத்துச் சென்று விற்றார்.

Ø  இவர் தனது ஊரை விட்டு வாணிகத்திற்காக மதுரைக்குச் சென்றார். அங்கு சுவாமி சங்கரதாஸ் என்பவரிடம் யாப்பிலக்கணம் கற்றார்.

Ø  இவர் எழுதிய திரைப்பாடல்கள் ஓர்இரவு, வேலைக்காரி, பராசக்தி, மனோகரா, பிரபாவதி, ஆதிபராசக்தி, தேவதாஸ் போன்றவை.

Ø  இவர் கலைமாமணி பட்டமும் இராசராண் விருதும் பெற்றார்.

Ø  இவர் சீர்திருத்த கருத்துக்களை முதன்முதலில் திரைப்படத்தில் கொண்டு வந்தார்.

Ø  திருக்குறள் கருத்துக்களையும் மிகுதியாக பயன்படுத்தியுள்ளார்.

Ø  இவரது பாடல்கள் ஜனசக்தி என்ற பத்திரிக்கையில் வெளிவத்துள்ளது.

Ø  எனது வலதுகை என பாரதிதாசனால் புகழப்பட்டவர்.

Ø  இவருடைய பாடல்கள்

*      பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே – தூக்குத் தூக்கி

*      குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பது ஏது – இரத்தக் கண்ணீர்

*      போகாதே போகாதே என்கணவா பொல்லாத சொப்பனம் நானுங் கண்டேன் – மாயாஜோதி (கட்டபொம்மு கூத்து)   

*      பக்தி முக்கியம் அந்தகாலம் படிப்பு முக்கியம் இந்தகாலம்.  

மேற்கோள் :

v  தடை நடையே அவர் எழுத்தில் இல்லை………….

v  வேற்றுமையை வினைச் சொற்கள் ஏற்பதில்லை…………..  

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....