Latest Government Jobs and updates

Thursday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 7ம் வகுப்பு - இலக்கணம்

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

7ம் வகுப்பு  

           இலக்கணம்   (Source TN Textbook)

இயல் 1

https://youtu.be/4hrm7XVG59Q

இயல் 2

https://youtu.be/yCbWJOKAjk8

இயல் 3

https://youtu.be/tHk6eLsZuGA

இயல் 4

https://youtu.be/ppGgFZ3Zhps

இயல் 7 

Part I

Part II


Wednesday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 9

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

               6ம் வகுப்பு

           இயல் 9

செய்யுள்

உரைநடை

துணைப்பாடம்

இலக்கணம்

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 9 - செய்யுள்

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

 

         6ம் வகுப்பு

           இயல் 9

செய்யுள்   (Source TN Textbook)

குற்றாலக் குறவஞ்சி

குற்றால மலையின் வளம்

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பர்

கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர்

தேனருவித் திரைஎழும்பி வானின்வழி ஒழுகும்

செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

கூனல்இளம் பிறைமுடித்த வேணி அலங்கார்

குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே!

 

ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்

ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்

வாடக் காண்பது மின்னார் மருங்கு

வருந்தக் காண்பது சூல்உளைச் சங்கு

போடக் காண்பது பூமியில் வித்து

புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து

தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி

திருக்குற் றாலர் தென் ஆரிய நாடே!

 

பாடல் – 1, பொருள் 

    வளைந்த இளம்பிறையைத் தன் சடையில் அணிந்த சிவபெருமான் வீற்றிருக்கும் மலை குற்றாலமலை. அதுதான் எங்கள் மலை. இந்த மலையில் ஆண் குரங்குகள் பெண் குரங்குகளுக்குப் பழங்களைப் பறித்துக்கொண்டு வந்து தரும். உண்ணும்போது பெண் குரங்குகள் பழங்களைத் தவறவிட்டு விடும். அவை சிந்தும் பழங்களைக் கேட்டுத் தேவர்கள் கெஞ்சி நிற்பார்கள். உயர்ந்த எங்கள் மலையில் உள்ள கானவர்கள் வானத்தில் இருக்கும் தேவர்களைக் கண்சிமிட்டி அழைப்பார்கள்.

 

   சித்தர்கள், இறப்பை நீக்கும் மூலிகைகளை எங்கள் மலையில் வளர்த்து வருவார்கள். அருவியின் அலை உயர்ந்து எழும்பி வானத்தையே தொடும். அந்த அலைநீரில் கதிரவனின் தேரில் பூட்டிய குதிரைகளின் கால்களும் தேரின் சக்கரங்களும் வழுக்கிவிழும்.

 

பாடல் – 2, பொருள்

      குற்றாலநாதராகிய சிவபெருமான் வாழும் நாடு எங்கள் நாடு. எங்கள் நாட்டில் மக்கள் அஞ்சி ஓடிப்போவது இல்லை; வெள்ளம்தான் ஓடும். மக்கள் இங்கு ஒடுங்கி இருப்பதில்லை; தவம் செய்வோரின் உள்ளம்தான் ஒடுங்கி இருக்கும். மக்கள் இங்கு நோய், வறுமையால் வாடுவது இல்லை; பெண்களின் மெல்லிடை மட்டுமே வாடும். மக்கள் இங்கு வருந்துவது இல்லை; முத்துகளை ஈனும் சங்குகள் மட்டுமே வருந்துகின்றன. இங்குப் பயன் அற்றவை என எவையும் தூக்கிப் போடப்படுவது இல்லை; விதைகள் மட்டுமே மண்ணில் போடப்படுகின்றன. மக்கள் இங்கே துன்பத்தில் புலம்புவது இல்லை; குழந்தைகள் காலில் அணியும் கிண்கிணிகளே புலம்பல் ஒலி எழுப்புகின்றன. மக்கள் இங்கே செல்வங்களைத் தேடி அலைவதில்லை; அறம், பெருமை இரண்டை மட்டுமே மக்கள் இங்குத் தேடுவார்கள். இவ்வாறு குறத்தி, தன் மலைவளமும் நாட்டுவளமும் குறித்துக் கூறுகிறாள்.

 

சொல்பொருள்

1. வானரங்கள் – இச்சொல், பொதுவாகக் குரங்குகளைக் குறிக்கும். இங்கு ஆண் குரங்குகளைக் குறித்தது;

மந்தி – பெண் குரங்கு;

வான்கவிகள் – தேவர்கள்;

கமனசித்தர் – வான்வழியே நினைத்த இடத்துக்குச் செல்லும் சித்தர்கள்;

காயசித்தி – மனிதனின் இறப்பை நீக்கிக் காக்கும் மூலிகை;

பரிக்கால் – குதிரைக்கால்;

கூனல் – வளைந்த;

வேணி – சடை.

 

2. மின்னார் – பெண்கள்;

மருங்கு – இடை;

சூல்உளை – கருவைத் தாங்கும் துன்பம்.

 

நூற்குறிப்பு

       இந்நூலின் முழுப்பெயர் திருக்குற்றாலக் குறவஞ்சி. ஆசிரியர் திரிகூட ராசப்பக்கவிராயர் ஆவார். குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது இந்நூல். ஒசைநயமிக்க பாடல்கள் இந்நூலில் நிறைந்து காணப்படுகின்றன.

சிலேடைப்பாடல்

மரமும் பழைய குடையும்

பிஞ்சு கிடக்கும் பெருமழைக்குத் தங்காது

மிஞ்ச அதனுள் வெயில்ஒழுகும் – தஞ்சம்என்றோர்

வேட்டதுஅருள் முத்துசுவா மித்துரைரா சேந்திராகேள்!

கோட்டுமரம் பீற்றல் குடை.

 

பாடல்பொருள்

       அடைக்கலம் என்று வந்து அடைந்தவர் விரும்பியதனை அளிக்கும் மன்னனே! (முத்துசாமித்துரை) கேட்பாயாக!

 

      கிளைகளை உடைய மரம், இளம் காய்களை உடையதாக இருக்கும்; மிக்க மழை பெய்தால் தாங்காது விழும்; அதனிடையே அமைந்த இடைவெளி வழியாக வெயில் வரும்.

 

       பழைய குடையானது, கழிந்திருக்கும்; பெருமழையைத் தாங்காது; துளைகள் வழியாக வெயில் உள்ளே செல்லும். எனவே, இத்தகைய காரணங்களால், பீற்றல் குடை, மரத்துக்கு ஒப்பானதாகும்.

 

சொல்பொருள்

கோட்டு மரம் – கிளைகளை உடைய மரம்;

பீற்றல் குடை – பிய்ந்த குடை.

 

ஆசிரியர் குறிப்பு

      அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பிறந்தவர். இருபத்தைந்துக்கும் மேற்பட்ட தனிப்பாடல்களை இயற்றியவர். இவர்தம் காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டு.

 

நூல்குறிப்பு

     தனிப்பாடல் திரட்டில் இடம்பெற்றுள்ள சிலேடைப்பாடல் ஒன்று பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளது.

 

        ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது சிலேடை எனப்படும். இதனை, ‘இரட்டுறமொழிதல்’ எனவும் கூறுவர். இரண்டு + உற + மொழிதல் – இரட்டுறமொழிதல். இருபொருள்படப் பாடுவது.

(எ.கா.) ஆறு

    ஆறு என்பது நீர் ஓடுகின்ற ஆற்றைக் குறிக்கும்.

    எண் ஆறனையும் (6) குறிக்கும்.

    செல்லும் வழியையும் குறிக்கும்.


Monday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 8 - துணைப்பாடம்

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

6ம் வகுப்பு  

           இயல் 8

துணைப்பாடம்   (Source TN Textbook)

நாடும் நகரமும்

 

நாடு

    நாடு என்னும் சொல் ஆதியில் மக்கள் வாழும் நிலத்தைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டது. அந்தமுறையில் தமிழர் வாழ்ந்த நாடு தமிழ்நாடு எனப் பெயர் பெற்றது. மூவேந்தர்களின் ஆட்சிக்கு உட்பட்ட தமிழ்நாட்டின் பகுதிகள் அவரவர் பெயராலேயே சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்று அழைக்கப்பட்டன. இப்பெயர்கள் மிகத் தொன்மை வாய்ந்த தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. நாளடைவில் முந்நாடுகளின் உட்பிரிவுகளும் ‘நாடு’ என அழைக்கப்பட்டன. கொங்குநாடு, தொண்டைநாடு முதலியன இதற்குச் சான்றாகும்.

 

       சிறுபான்மையாகச் சில தனி ஊர்களும் நாடென்று பெயர் பெற்று வழங்குதல் உண்டு. முன்னாளில் முரப்புநாடு என்பது பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்று. இப்பொழுது, அப்பெயர் பொருநையாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயராக நிலவுகின்றது. அதற்கு எதிரே ஆற்றின் மறுகரையில் உள்ள மற்றொரு சிற்றூர் வல்லநாடு என்னும் பெயர் உடையது. இங்ஙனம், நாடு என்னும் சொல் ஊரைக் குறிக்கும் முறையினைச் சோழ நாட்டிலும் காணலாம்.

 

     மாயவரத்திற்கு அணித்தாக உள்ள ஒரூர் கொரநாடு என வழங்கப்படுகிறது. கூறைநாடு என்பதே கொரநாடு என மருவிற்று. பட்டுக்கோட்டை வட்டத்தில் கானாடும், மதுராந்தக வட்டத்தில் தொன்னாடும் உள்ளன.

 

     நாடு என்னும் சொல்லின் பொருள் வழக்காற்றில் நலிவுற்ற தன்மையை இவ்வூர்ப் பெயர்கள் உணர்த்துக்கின்றன.

 

நகரம்

    சிறந்த ஊர்கள், நகரம் என்னும் பெயரால் வழங்கும். நாட்டின் தலைமைசான்ற நகரம் தலைநகரம் எனப்படும். முன்னாளில் ஊர் என்றும், பட்டி என்றும் வழங்கிய சில இடங்கள், பிற்காலத்தில் சிறப்புற்று நகரங்கள் ஆயின.

    

       ஆழ்வார்களில் சிறந்த நம்மாழ்வார் பிறந்த இடம் குருகூர் என்னும் பழம்பெயரைத் துறந்து, ஆழ்வார்திருநகரியாகத் திகழ்கின்றது. பாண்டி நாட்டிலுள்ள விருதுப்பட்டி, வாணிகத்தால் மேம்பட்டு இன்று விருதுநகராக விளங்குகின்றது. இக்காலத்தில் தோன்றும் புத்தூர்களும் நகரம் என்னும் பெயரையே பெரிதும் நாடுவனவாகத் தெரிகின்றன.

 

     சென்னையின் பகுதியான தியாகராய நகரமும், காந்தி நகரமும், சிதம்பரத்திற்கு அண்மையில் அமைந்து இருக்கும் அண்ணாமலை நகரமும், தஞ்சையில் தோன்றியுள்ள கணபதி நகரமும் இதற்குச் சான்றுகள் ஆகும்.

 

சென்னை

    இக்காலத்தில் தமிழ்நாட்டில் தலைசிறந்து விளங்கும் நகரம் சென்னை மாநகரம். முந்நூறு ஆண்டுகட்கு முன்னே சென்னை ஒரு பட்டினமாகக் காணப்படவில்லை. கடற்கரையில் துறைமுகம் இல்லை; கோட்டையும் இல்லை; பெரும்பாலும் மேடுபள்ளமாகக் கிடந்தது அவ்விடம்.

 

     சென்னையின் பகுதிகளாக இன்று விளங்கும் மயிலாப்பூரும், திருவல்லிக்கேணியும் கடற்கரைச் சிற்றூர்களாக அந்நாளில் காட்சி அளித்தன.

 

     மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சுரம் என்னும் சிவாலயம் மிகப் பழைமை வாய்ந்தது. திருஞானசம்பந்தர் அதனைப் பாடியுள்ளார்.

 

     திருமயிலைக்கு அருகே உள்ள திருவல்லிக்கேணி, முதல் ஆழ்வார்களால் பாடப் பெற்றது. அவ்வூரின் பெயர் அல்லிக்கேணி என்பதாகும். அல்லிக்கேணி என்பது அல்லிக்குளம். அல்லி மலர்கள் அழகுற மலர்ந்து கண்ணினைக் கவர்ந்த கேணியின் அருகே எழுந்த ஊர் அல்லிக்கேணி எனப் பெயர் பெற்றது. அங்கே பெருமாள், கோவில் கொண்டமையால் திரு என்னும் அடைமொழி பெற்றுத் திருவல்லிக்கேணி ஆயிற்று.

 

   திருவல்லிக்கேணிக்கு வடக்கே மேடும்பள்ளமுமகாப் பல இடங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று நரிமேடு.

 

      இன்று மண்ணடி என வழங்கும் இடம் ஒரு மேட்டின் அருகில் பெரும்பள்ளமாக அந்நாளில் காணப்பட்டது.

 

(ரா.பி.சேதுப்பிள்ளையின், ‘ஊரும் பேரும்’ என்னும் நூலில் இருந்து எடுத்தாளப்பட்ட பகுதி.)

 

புரம்

   ‘புரம்’ என்னும் சொல், சிறந்த ஊர்களைக் குறிப்பதாகும். ஆதியில் காஞ்சி எனப் பெயர் பெற்ற ஊர் பின்னர், ‘புரம்’ என்பது சேர்ந்து காஞ்சிபுரம் ஆயிற்று. பல்லவபுரம் (பல்லாவரம்), கங்கைகொண்ட சோழபுரம், தருமபுரம் முதலியவை மேலும் சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.

 

பட்டினம்

  கடற்கரையில் உருவாகும் நகரங்கள் ‘பட்டினம்’ எனப் பெயர் பெறும். காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் ஆகியவை ‘பட்டினம்’ எனப் பெயர் பெற்ற ஊர்கள் ஆகும்.

 

பாக்கம்

       கடற்கரைச் சிற்றூர்கள் ‘பாக்கம்’ எனப் பெயர் பெறும். பட்டினப்பாக்கம், கோடம்பாக்கம், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம் இப்படிப் ‘பாக்கம்’ எனப் பெயர் பெற்ற ஊர்களைக் குறிப்பிடலாம்.

 

புலம்

     ‘புலம்’ என்னும் சொல் நிலத்தைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, மாம்புலம், தாமரைப்புலம், குரவைப்புலம் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

 

குப்பம்

      நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள், ‘குப்பம்’ என்னும் பெயரால் வழங்கப்பெறும். காட்டுக்குப்பம், நொச்சிக்குப்பம், மஞ்சக்குப்பம், மந்தாரக்குப்பம் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

Tamil Nadu Teachers Eligibility Test Previous Year Question Paper - Paper I (Part I)

 

TN TET Model Question Paper

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு – 2012

                 தாள் 1

                   பகுதி I

குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல்

1)   மனித மனவெழுச்சியின் வெளிப்பாடு கீழ்க்காணும் வரிசையில் அமையும் என மக்டூகல் கருதுகிறார்.

A.  செயல் è உணர்வு è அறிவு 

B.  அறிவு è சூழ்நிலை è உடலியக்கம் 

C.  அறிவு è உணர்வு è உடலியக்கம்

D.  மனவெழுச்சி è உணர்வு è அறிவு

2)   வீரசாகசங்கள் புரிபவரிடம் துணிச்சல் மற்றும் _________ மிகுந்து காணப்படும்.

A.  பரிவு

B.  அன்பு

C.  உடல்வலிமை

D.  மனவலிமை

3)   ‘கூட்டாளிக் குழுப் பருவம்’ என்று அழைக்கப்படும் பருவம்.

A.  குழந்தைப்பருவம்

B.  பிள்ளைப்பருவம்

C.  குமாரப்பருவம்

D.  நடுத்தரவயதுபருவம்

4)   இன்றைய சூழலில் குழந்தைகளிடம் மிக முக்கியமாக இருக்க வேண்டிய ஒன்று.

A.  நுண்ணறிவு

B.  ஆளுமை

C.  நல்லொழுக்கம்

D.  அனுபவம்

5)    ‘Mnemonics’ என்பது _____ உடன் தொடர்புடையது.

A.   நிமோனியா

B.   நினைவு

C.   இரத்தசோகை

D.   மறதி

6)    RTE என்பதன் விரிவாக்கம்

A.   Right of children to free and compulsory education

B.   Right to teacher education

C.   Right of children to education

D.   Right towards education

7)      எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான செயல்களைக் கொடுத்தாலும் அவர்கள் வெவ்வேறு விதமாகப் புரிந்துக் கொள்வதற்குக் காரணம்.

A.    பாலினம்

B.     கற்றல் குறைபாடு

C.    அனுபவம்

D.    மரபு

8)      வளர்ச்சிகள் சார் செயல்கள் என்ற கருத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர்.

A.    ஹெர்பார்ட்

B.     புரூனர்

C.     ஹல்

D.    ஹாவிகாஸ்ட்

9)      ________ நிலையில் குழந்தைகளால் கருத்துக்களை உருவாக்க இயலும்.

A.    பேசுவதற்கு முன்பாக

B.     பேச ஆரம்பித்தவுடன்

C.     பிள்ளைப் பருவத்தில்

D.    பிள்ளைப் பருவத்திற்குப் பின்

10)  கற்றல் சூழலில் கீழ் உள்ளவற்றுள் சரியான வரிசை எது?

A.    கவர்ச்சி è கவனம் è நினைவு

B.     நினைவு è கவனம் è கவர்ச்சி

C.     கவனம் è கவர்ச்சி è நினைவு

D.    நினைவு è கவர்ச்சி è கவனம்

11)   சைனடிக்ஸ் என்னும் ஆங்கிலச் சொல்லின் பொருள்.

A.    பல்வேறு பொருள்களைப் பிரித்தல்

B.     பல்வேறு பொருள்களை ஒருங்கிணைத்தல்

C.     பொருட்களை ஒப்பிடுதல்

D.    பல்வேறு பொருட்களை வடிவமைத்தல்

12)  திறனாய்வுச் சிந்தனையைத் தூண்டுவது.

A.    முன் மூளை

B.     வலது மூளை

C.    இடது மூளை

D.    பின் மூளை

13)  ஆசிரியர் கருத்துப் பொழிவு முறையை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் _________ வளர்க்கப்படுகிறது.

A.    ஆக்கத்திறன்

B.     நுண்ணறிவு

C.     புலன்காட்சி

D.    நினைவு

14)  அச்சு மற்றும் மின் ஊடகங்களில் முன்னிலைப் படுத்தப்பட வேண்டியவை.

A.    வாழ்க்கையின் ஏற்றுக் கொள்ளக்கூடிய எதிர்மறையான பகுதி

B.     வாழ்க்கையின் ஏற்றுக் கொள்ளக்கூடிய நேர்மறையான பகுதி

C.     வாழ்க்கையின் நேர்மறை, எதிர்மறையான பகுதி

D.    வாழ்க்கையின் மகிழ்ச்சியற்ற பகுதி

15)  இருப்பதில் சிறந்தவற்றை குழந்தைகளுக்கு வழங்க மனித இனம் கடன்பட்டுள்ளது என ஐ.நா.சபை _____ல் பிரகடனப்படுத்தியது.

A.    1969,ஆகஸ்ட்15

B.     1969,ஏப்ரல்20

C.     1959,ஜூன்16

D.    1959,நவம்பர்20

16)  தாழ்வு மனப்பான்மை _______ நோயை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

A.    ஆஸ்துமா

B.     தோல் நோய்

C.     நீரழிவு நோய்

D.    மூட்டு வலி

17)  மாய ஒலி தோன்றக் காரணம்.

A.    செவி குறைபாடு

B.     சினம்

C.     பொறாமை

D.    கவலை

18)  பியாஜேவின் கருத்துப்படி தன்னை மையமாக்கி சிந்திக்கும் தன்மை காணப்படும் பருவம்.

A.    புலன் இயக்கப் பருவம்

B.     மனச் செயல்பாட்டுக்கு முந்தைய பருவம்

C.     கண்கூடாகப் பார்ப்பதைக் கொண்டு சிந்திக்கும் பருவம்

D.    முறையான மனச்செயல்பாட்டு பருவம்

19)  ‘அமீபா ஒரு விலங்கு அல்ல’ என்பது

A.    குறைபட பொதுமைப்படைத்தல்

B.     மிகைபட பொதுமைப்படைத்தல்

C.     காரணங் கற்பித்தல்

D.    அடையாளங் காணுதல்

20)  கார்போஹைட்ரேட், புரதம் ஆகியவற்றின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குப்படுத்துவது.

A.    இன்சுலின்

B.     தைராக்சின்

C.    அட்ரீனலின்

D.    ஆக்சிடாசின்

21)  ஒப்பார் குழு என்பது ______ மூலம் ஏற்படுகிறது.

A.    ஆசிரியர் + கட்டுப்பாடான சூழல்

B.     பெற்றோர் + சுதந்திரமான சூழல்

C.     சமூகம் + கட்டுப்பாடான சூழல்

D.    எதிர்பாராமல் + சுதந்திரமான சூழல்

22)  இன்று திங்கள்கிழமை, நாளை மறுநாளுக்கு முந்தைய கிழமை _________ இது எந்த வகை சோதனை?

A.    பொதுஅறிவு 

B.     புரிந்துகொள்ளுதல்

C.     கணிதஆய்வு

D.    சொற்களஞ்சியம்

23)  SQ3R முறையால் மேம்படுத்தப்படுவது.  

A.    கவனம்

B.     நாட்டம்

C.     ஊக்கம்

D.    நினைவு

24)  கவனத்தின் ஊசலாடும் தன்மையின் காலஅளவு.

A.    5-20வினாடிகள்

B.     10-15வினாடிகள்

C.    3-25வினாடிகள்

D.    7-10வினாடிகள்

25)  தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சியும் பயனும் விளைகின்ற வகையில் எல்லா நிலைகளிலும் பொருத்தப்பாடுடன் செயல்படுவது.

A.    சூழ்நிலை சார்ந்தது

B.     மனநலம் சார்ந்தது

C.     மனப்பான்மை சார்ந்தது

D.    பொருளாதாரம் சார்ந்தது

26)  மகிழ்ச்சி தராத தூண்டல் மறைவதற்கு துலங்கல் காரணமாக இருப்பின் அது.

A.    நேரிடை வலுவூட்டம்

B.     மறைதல்

C.    எதிரிடை வலுவூட்டம்

D.    தண்டனை

27)  பயிற்சி அளிக்கப்பட்ட வளர்ப்புப் புறாவை அனுப்பி கோவில் கோபுரங்களில் வந்து உட்காரும் காட்டுப் புறாக்களை கீழிறங்கச் செய்து பிடித்தல்.

A.    முயன்று தவறிக் கற்றல்

B.     உற்று நோக்கிக் கற்றல்

C.     செயல்படு ஆக்க நிலையுறுத்தம்

D.    ஆக்க நிலையுறுத்தம்

28)  கற்றம் வீதம் =

A.    கற்றல் தேர்ச்சியின் அளவு

      கற்றுத் தேர்வதற்கு எடுத்துக் கொண்ட நேரம்

    B. கற்ற பாடப்பொருள் அளவு

         கற்றுத் தேர்வதற்கு எடுத்துக் கொண்ட நேரம்

   C. கற்றல் தேர்ச்சியின் அளவு

      பாடப்பொருள் அளவு

   D. கற்று பாடப்பொருள் அளவு

      கலைத்திட்ட அளவு

29)  வகுப்பில் தன்னால் முடியும் என அனைத்து வேலைகளையும் ஏற்றுச் செய்து மகிழ்பவர்.

A. போட்டியாகக் கற்பவர்

B. பங்கேற்றுக் கற்பவர்

C. இணைந்து கற்பவர்

D. சுயமாகக் கற்பவர்

30)  குழந்தைகளது சாதனையை பாராட்டுதல் அல்லது குறைகூறுதல் எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பது பற்றிக் கூறியவர்.

A. ஹர்லாக்

B. கால்டன்

C. பியர்சன்

D. உட்ஸ்

 

                   பகுதி II

31) வௌவால் மரத்தில்

    A .தொங்கும்

B.  உறங்கும்

C.  ஆடும்

D.  இருக்கும்

32) கோடிட்ட இடத்தை நிரப்புக:

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை இயற்றிய நூல் _______

A.  பாண்டியன் பரிசு

B.  பாப்பா பாட்டு

C.  குடும்ப விளக்கு

D.  உமர்கய்யாம் பாடல்கள்

33) எழுத்தாளர் தொட்டு எழுதக்கூடாத மை.

A.  பெருமை

B.  பொய்மை

C.  தூய்மை

D.  உண்மை

34) _________ என்னும் நூலில் தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இருந்தன.

A.  முல்லைப்பாட்டு

B.  குறிஞ்சிப்பாட்டு

C.  பட்டினப்பாலை

D.  பதிற்றுப்பத்து

35) பறவைகளை ________ வகையாகப் பிரிக்கலாம்.

A.  ஐந்து

B.  ஆறு

C.  மூன்று

D.  எட்டு

36) விக்டோரியா மகாராணியார் காலையில் கண் விழித்ததும் முதலில் படிக்கும் நூல்.

A.  பைபிள்

B.  திருக்குறள்

C.  திருவாசகம்

D.  மோட்சபயணம்

37) மலையும் மலை சார்ந்த இடமும்

A.  முல்லை

B.  மருதம்

C.  நெய்தல்

D.  குறிஞ்சி

38) எழுத்துக்களின் பிறப்பை இடப்பிறப்பு, _______ என இருவகையாகப் பிரிக்கலாம்.

A.  ஒலிப்பிறப்பு

B.  முயற்சிபிறப்பு

C.  நாபிறப்பு

D.  அண்ணப்பிறப்பு

39) தமிழ் எண்ணுருக்களை எழுதுக. 19,25:

A.  கஅ

B.  ககூஉரு

C.  உஉ

D.  கக

40) புதுக்கவிதை வளர்ச்சியில் ______ பங்கு போற்றத்தக்கது.

A.  வல்லிக்கண்ணன்

B.  பாரதியார்

C.  வைரமுத்து

D.  சுரதா

41) நிவேதனம் என்ற சொல்லின் பொருள்.

A.  உணவு

B.  அறுசுவை உணவு

C.  நல்உணவு

D.  படையமுது

42) கனகம் என்பதன் பொருள்.

A.  செல்வம்

B.  பொன்

C.  மணி

D.  முத்து

43) மான விஜயம் என்னும் நாடகம் ______ என்னும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது.

A.  கார்நாற்பது

B.  களவழிநாற்பது

C.  அகநானூறு

D.  புறநானூறு

44) தமிழ் நாடகத் தந்தை என்று இன்றளவும் உலகம் போற்றி வணங்குபவர்.

A.  பம்மல் சம்பந்தனார்

B.  பட்டுக்கோட்டை

C.  சங்கரதாச சுவாமிகள்

D.  தெ.பொ.கிருஷ்ணசாமி

45) காய்களின் இளமை மரபு பெயரை எடுத்து எழுதுக.

அவரைப் பிஞ்சு, வாழை _______

A.  பூ

B.  காய்

C.  கச்சல்

D.  மூசு

46) பாம்பு விவசாயிகளின்

A.  பகைவன்

B.  நண்பன்

C.  உறவினன்

D.  சகோதரன்

47) குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஆரவாரித்துப் பாடும் விளையாட்டுப் பாடல்கள்.

A.  தாலாட்டுப் பாடல்கள்

B.  வழிபாட்டுப் பாடல்கள்

C.  தொழில் பாடல்கள்

D.  நாட்டுப்புறப் பாடல்கள்

48) ஆற்றுணா என்பதன் பொருள்.

A.  ஆறிய உணவு

B.  நல்ல உணவு

C.  கட்டுச்சோறு

D.  சமைத்த உணவு

49) தாகூரின் விசுவபாரதி கல்லூரி ______ மாநிலத்தில் உள்ளது.

A.  குஜராத்

B.  மேற்கு வங்காளம்

C.  அஸ்ஸாம்

D.  பீகார்

50) பன்னிரண்டு வயதிலேயே மற்போர், சிலம்பம், வாள் வீச்சு என வீரக்கலைகளையெல்லாம் கற்றுத் தேர்ந்திருந்த சிறுவன்.

A.  பாண்டிய நெடுஞ்செழியன்

B.  புலித்தேவன்

C.  வீரப்பாண்டியன்

D.  இமயவரம்பன்

51) தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு நடைபெற்ற ஆண்டு.

A.  கி.பி.1010

B.  கி.பி.1500

C.  கி.பி.1020

D.  கி.பி.2000

52) பொருள் கூறுக: குவை

A.  கூட்டம்

B.  குவியல்

C.  கும்பல்

D.  கோர்த்து

53) நிகண்டுகளில்  பழமையானது எது?

A.  சேந்தன் திவாகரம்

B.  மண்டல புருடர்

C.  அகராதி

D.  சதுரகராதி

54) அறிவியல் கலைச் சொல் களஞ்சியம் ________ ஆண்டு வெளியிடப்பட்டது.

A.  1993

B.  1991

C.  1990

D.  1992

55) ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி.

A.  வேலுநாச்சியார்

B.  அஞ்சலையம்மாள்

C.  அம்புஜத்தம்மாள்

D.  வை.மு.கோதைநாயகி அம்மாள்

56) நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர்.

A.  கலைவாணர்

B.  மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

C.  கவிமணி

D.  பாரதிதாசன்

57) இராமானுஜன் சாதாரண மனிதரல்லர் அவர் இறைவன் தந்தப் பரிசு எனக் கூறியவர்.

A.  பேரா.ஈடிபெல்

B.  எடிசன்

C.  லார்ட்மெண்ட்லண்ட்

D.  சார்லஸ்

58) வாணிதாசன் பிறந்த ஊர்.

A.  மதுரை

B.  கேரளா

C.  வங்காளம்

D.  வில்லியனூர்

59) மதுரை வீதிகளின் பெயர்களில் இது ஒன்றல்ல.

A.  கூலவீதி

B.  பொன்வீதி

C.  மன்னவர்வீதி

D.  பாணர்வீதி

60) உலகையே நடுங்கச் செய்த கொடுங்கோலராக ஹிட்லர் இருந்தாலும், அவரையே மன்னிப்புக் கேட்க செய்த மாவீரன்.

A.  தாமஸ் ஆல்வா எடிசன்

B.  சார்லஸ்

C.  G.U.போப்

D.  செண்பகராமன்

                                                   PART III

                                                 ENGLISH

61)                       Read the short conservation given below. Identify the language   function in the italicized sentence:

     Shrimathy: That remark was uncalled for

Venu: I’m Sorry. I shouldn’t have said it

A.   apologizing

B.   wishing

C.   Blaming

D.   forgiving

62) Read the short conservation given below. Identify the language function in the italicized sentence:

Arun: What shall we do this weekend?

Sheela: Why don’t we go on a picnic?

A.   welcoming  

B.   inviting 

C.   suggesting

D.   advising

63) Choose the correct question tag:

Mary has answered all the questions ____________?

A.   doen’t she

B.   didn’t she  

C.   wasn’t she

D.   hasn’t she

64) Choose the correct question tag

Hanif wasn’t listening ____________?

A.   was he

B.   has he

C.   did he

D.   isn’t he

65) Choose the right question to get the italicized part as the answer

Hari is writing a letter

A.   What does Hari write?

B.   What is Hari writing?

C.   Who is writing a letter?

D.   What is Hari doing?

66) Choose the correct word to complete the sentence:

We are satisfied ________  our son’s progress this term.

A.   for

B.   on

C.   about

D.   with

67) Which of the following is a form of the verb ‘be’?

A.   may  

B.   am

C.   can

D.   will

68) The passive form of the sentence ‘The Blue team won the game’ is

 

A.   The game is won by the blue team

B.   The game has been won by the blue team

C.   The game had been won by the blue team

D.   The game was won by the blue team

69) The reported form of the question Renu said to me, “Is the movie interesting?’ is

A.   Renu asked me if the movie was interesting

B.   Renu asked me if the movie has been interesting

C.   Renu asked me if the movie is interesting

D.   Renu asked me if the movie had been interesting

70) Choose the word which has almost the same meaning as the italicized one:

She seldom goes to conference

A.   nearly 

B.   rarely

C.   slightly

D.   incredibly

71) Find the italicized part in the sentence that is incorrect:    

     In some Counties   in Europe    teachers   are allowed

                                           1                                   2

giving   children some homework only at weekends

   3                                                                    4         

A.   1

B.   2

C.   3

D.   4

72) Choose the correct form of the verb to complete the sentence:

When _____ this morning?

A.   did you woke up

B.    did you wake up

C.   have you woken up

D.   were you woke up

73) Choose the correct answer form of the verb to complete the sentence:

We _____ volleyball yesterday

A.   played

B.   have played

C.   had played

D.   have been playing

74) Choose the correct word to complete the sentence:

There is very _____ petrol in the year. I’ll buy some when I go out.

A.   few  

B.   much

C.   a little

D.   little

75) Choose the correct word to complete the sentence:

He apologized _____ being late

A.   to

B.   for

C.   on

D.   of

Read the passage given below and choose the best answer for each of the questions:

Most human beings are awake during the day and sleep at night. Owls live the opposite way. Owls are nocturnal. This means that they sleep all day and stay awake at night. Because owls are nocturnal, this means they must eat at night. But finding food in the dark is difficult. To help them, they have a special eyes and ears.

Owls have very large eyes. These eyes absorb more light than normal. Since there is little light during the night. It is helpful to be able to absorb more of it. This helps owls find food in the dark.

Owls also have very good hearing. Even when owls are in the trees, they can hear small animals moving in the grass below. This helps owls catch their prey even when it is very dark.

Like owls, mice are also nocturnal animals. Mice have an excellent sense of smell. This helps them find food in the dark.

Being nocturnal helps mice to hide from many different animals that want to eat them. Most of the birds, snacks and lizards that like to eat mice sleep at night – except, of course, owls!

76) The word ‘diurnal’ is the opposite of the word ‘nocturnal’. Using information in the passage, we can understand that an animal that is ‘diurnal’

A.   sleeps at night and is awake during the day

B.   hunts during the day and is awake at night

C.   sleeps every other night and is awake during the day

D.   hunts at night and sleeps during the day

77) Based on information in Paragraph 2, it can be understood that an animal with small eyes

A.   must b4e diurnal

B.   has trouble seeing in the dark

C.   can see very well at night

D.   must be nocturnal

78) According to the passage, owls can find food in the dark using their sense of

A.   sight only

B.   sight and sound

C.   sight, sound and smell

D.   sight and smell

79) In paragraph 3 the author writes. “This helps owls catch their prey even when it is very dark”. What is prey?

A.   a noise that an animal makes during the night

B.   A small animal such as a pet dog or cat

C.   An animal that is hunted by other animals

D.   An enemy

80. According to the passage, mice sleep during the day in order to

A.   find food that other animal cannot

B.   keep themselves safe

C.   store energy for night time activities

D.   stay awake at night

81) Using the information in the last paragraph, it can be understood that

A.   owls hunt mice

B.   mice can hide from owls

C.   mice and owls both hide from birds, snakes and lizards

D.   owls sleep at night

82) Which of the following conclusions would work best at the end of this passage?

A.   The owl is a nocturnal animal. This means it is active at night. The owl’s excellent sense of sight and sound enables it to find food in the dark.

B.   Mice are nocturnal animals. This means they are active at night. Similar to the owl. Mice use their excellent sense of smell to find food in the dark.

C.   Some animals are nocturnal. This means they are active at night. the owl and the mouse are good examples of animals but the use their senses to find food in the dark.

D.   The owl and the mouse sleep during the day and stay awake at night.

83) Choose the right question to get italicized part as the answer:

The Children are sitting in the garden

A.   Where do children sit?

B.   Where have the children been sitting?

C.   Where are the children sitting?

D.   Where are they sitting?

84) Find out the pronounced differently from the others

 I. blood

II. Moon

III. Soon

IV. Mood

A.   I

B.   II

C.   III

D.   IV

85) Find the word that is pronounced differently from the others

I. bear

II. Dare

III. Fare

IV. Dear

A.   I

B.   II

C.   III

D.   IV

86) Find the word that is pronounced differently from the others

I. enjoyed

II. Jumped

III. Died

IV. Filled

A.   I

B.   II

C.   III

D.   IV

87) Find the italicized part in the sentence that is incorrect:

It is    a well    idea  to encourage  boys  to learn  to cook

               1                       2                            3               4

A.   1

B.   2

C.   3

D.   4

87) Choose the word which has almost the same meaning as the italicized one:

I help them to assemble the different parts.

A.   manufacture

B.   store

C.   check  

D.   fit

89) Choose the correct antonym for the italicized word:

Travelling is considered very dangerous.

A.   harmful

B.   peaceful  

C.   safe

D.   exciting

90) Choose the correct antonym for the italicized word:

This is a common thing.

A.   strange  

B.   funny  

C.   real

D.   special