Latest Government Jobs and updates

Tuesday

TNPSC Tamil study material Part-B Thirukkural


                        ஒழுக்கமுடைமை
                  (நல்ல நடத்தை உடையவராதல்)

                                                            அறத்துப்பால்

                          அதிகாரம்(14)

                                                அறம்- இல்லறவியல்

1.ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
விளக்கம்: ஒருவனுக்கு அனைத்துச் சிறப்புகளையும் தருவது ஒழுக்கமே.அவ்வொழுக்கத்தை உயிரினும் மேலானதாகக் கருதிக் காத்துக் கொள்ளவேண்டும்.

2.பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
விளக்கம்: ஒருவன் ஒழுக்கமாக நடப்பது கடினமானது.ஒழுக்கத்தோடு நடத்தால் அது அவனுக்கு நல்ல துணை தரும்.

3.ஒழுக்கம் முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
விளக்கம்: ஒருவன் ஒழுக்கமாக இருந்தால் அது அவனுக்கும்,அவன் குடும்பத்திற்கும் பெருமைத் தரும்.ஒழுக்கம் இல்லாதிருந்தால் உயர்குடியில் பிறந்தாலும் இழிவாகவே பேசப்படுவர்.

4.மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
விளக்கம்: ஒருவன் கற்ற கல்வியை மறந்து விட்டால் மீண்டும் கற்று கொள்ள முடியும்.ஆனால் ஒழுக்கத்தை இழந்து நடந்தால் அது அவன் சிறப்பை அழித்து விடும்.

5.அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
விளக்கம்: பொறாமைக்குணம் உடையவரிடம் வளர்ச்சி இருக்காது.அதுபோல ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இருக்காது.

6.ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
விளக்கம்: ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை அறிந்தவர்கள்,அவ்வொழுக்கத்திலிருந்து தன்னை காத்து கொள்வர்.

7.ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
விளக்கம்: ஒழுக்கம் உடையவர்களை இவ்வுலகம் புகழ்ந்து பராட்டும்.ஒழுக்கம் இல்லாதவர்கள் செய்யது குற்றங்களுக்கு பழியும் பாவமும் அடைவர்.

8.நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
விளக்கம்: நல்ல ஒழுக்கம் என்பது நன்மையை தரும் விதையாகும்.தீய ஒழுக்கம் என்பது துன்பத்தை விளைவிக்கும்.

9.ஒழுக்கம் உடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
விளக்கம்: ஒழுக்கம் உடையவர்கள் தம் வாயினால் பிறர்க்கு தீமை தரும் சொற்களை பேச மாட்டார்கள்.

10.உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
விளக்கம்: ஒழுக்கம் இல்லாதவர்கள் உலகியல் கல்வியை எவ்வளவு கற்றாலும் அறிவில்லாதவராகவே கருதப்படுவர்.

No comments:

Post a Comment