Latest Government Jobs and updates

Thursday

TNPSC Tamil study material part-B Thirukkural


                                    பொறையுடைமை

                                    (பிறர் செய்யும்         துன்பங்களை பொறுத்தல்)

                                                               அறத்துப்பால்

                                                                        அதிகாரம்(16)

                                                                     அறம்-இல்லறவியல்

1.அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
விளக்கம்: நிலமானது தன்னைத் தோண்டுபவரை தாங்குவது போல,நம்மை இகழ்பவரை பொறுத்துக் கொள்வது சிறந்த செயலாகும்.

2.பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறுத்தல் அதனினும் நன்று.
விளக்கம்: ஒருவர் நமக்கு செய்யும் தீமையை பொறுத்துக் கொள்வதை விட மறந்து விடுவது நல்ல செயலாகும்.

3.இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
விளக்கம்: விருந்தினரை வரவேற்க முடியாத நிலை ஒருவனுக்கு வறுமையை விட மிகப் பெரிய வறுமை ஆகும்.அதுபோல அறிவு இல்லாதவர்கள் செய்யும் குற்றத்தைப் பொறுத்துக் கொள்வது வலிமையுள் சிறந்த வலிமையாகும்.

4.நிறையுடைமை நீங்காமை வேண்டின்,பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.
விளக்கம்: நற்குணங்கள் நம்மை விட்டு நீங்காமல் இருக்க பொறுமையை இழக்காமல் காத்து கொள்ள வேண்டும்.

5.ஒறுத்தாரை ஒன்றாக வையாரே, வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
விளக்கம்: தீமை செய்தவரை பொறுத்துக் கொள்ளாது தண்டிப்பவரை மதிக்கமாட்டார்கள்.ஆனால் அத்தீங்கை பொறுத்துக் கொள்பவரை பொன்னை போல மதித்து போற்றுவர்.

6.ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்.
விளக்கம்: தீங்கு செய்தவரைப் பொறுத்து கொள்ளாது தண்டிப்பது அந்த ஒருநாள் மட்டுமே மகிழ்ச்சி தரும்.அதை பொறுத்து கொண்டவர்களுக்கு உலகம் அழியும் வரை புகழ் உண்டாகும்.

7.திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்(து)
அறனல்ல செய்யாமை நன்று.
விளக்கம்: அறியாமையால் ஒருவர் செய்யும் தீமையை எண்ணி வருந்தித் தாமும் தீமை செய்யாது பொறுத்துக் கொள்வது சிறந்த பண்பாகும்.

8.மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
விளக்கம்: மடமையால் தமக்கு தீமை செய்தவரை பொறுமையாக இருத்து வெற்றி கொள்ளல் வேண்டும்.

9.துறுந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
விளக்கம்: கொடிய சொற்களை பேசுபவர்கள் முன் பொறுமையாக இருப்பது துறவிகளை விட மேலாகக் கருதுவர்.

10.உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
விளக்கம்: நோன்பு இருப்பவர்களை விடத் தம்மை இகழ்பவர்களை பொறுத்து கொள்பவர்களை மேலானவர்களாகக் கருதுவர்.

No comments:

Post a Comment