Latest Government Jobs and updates

Wednesday

TNPSC Tamil study material Part-B Thirukkural


                      அறிவுடைமை

                         பொருட்பால்

                                                             அதிகாரம்(43)

                                                           அறம்- அரசியல்

1.அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
விளக்கம்: அறிவு என்பது அழிவிலிருந்து நம்மை காக்கும் கருவியாகும்.பகைவர்களால் அழிக்க முடியாத கருவியாகும்.

2.சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்பது தறிவு.
விளக்கம்: மனம் போகும் பாதையில் தானும் போகாமல்,தீமையை விட்டு நன்மையானவற்றை செய்வதே சிறந்த அறிவாகும்.

3.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
விளக்கம்: ஏதாவது ஒரு செய்தியை யார் கூறினாலும்,அச்செய்தியின் கருத்தை ஆராய்ந்து அறிவது அறிவு ஆகும்.

4.எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
விளக்கம்: தான் சொல்லும் கருத்தை மற்றவர்கள் எளிதாக புரியவும்,மற்றவர்கள் சொல்லும் கருத்தை புரிந்து கொள்வதும்,அறிவுடையார்களின் செயலாகும்.

5.உலகந் தழீஇயது தொட்பம் மலர்தலுங்
கூம்பலு இல்ல தறிவு.
விளக்கம்: உலகத்தை புரிந்து நடப்பதே சிறந்த அறிவு.தெளிவும்,கலக்கமும் மாறிமாறி வந்தாலும் ஒரே சீராக இருப்பதே அறிவு.

6.எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வது துறைவ தறிவு.
விளக்கம்: உலக்கத்தோடு ஒத்து நடப்பதே அறிவாகும்.எனக்கு எல்லாம் தெரியும் என்று யார் கூறுவதையும் கேட்கமல் இருந்தால் பாவமும் பழியும் வந்து சேரும்.

7.அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
விளக்கம்: அறிவுடையவர்கள்,எதிர்காலத்தில் வர போவதை அறிந்து செயல்படுவர்.அறிவில்லாதவர் பின்விளைவை நோக்காது செயல்படுவர்.

8.அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்.
விளக்கம்: அஞ்சத்தக்கத்தைக் கண்டு அஞ்சுவது அறிவுடையார்களின் செயலாகும்.அஞ்சாமல் இருப்பது அறிவில்லாதவர்களின் செயலாகும்.

9.எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு கில்லை
அதிர வருவதோர் நோய்.
விளக்கம்: பின்வர போவதை முன்னே அறிந்து தன்னை காத்து கொள்பவர்கள் அறிவுடையவர்கள்,அவர்களுக்கு எந்த துன்பமோ நோயோ வராது.

10.அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் மிலர்.
விளக்கம்: அறிவுடையவர் எல்லாம் உடையவராக கருதப்படுவர்,அறிவு இல்லாதவரிடம் எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லாதவராகவே கருதப்படுவர்.

No comments:

Post a Comment