Latest Government Jobs and updates

Sunday

TNPSC Tamil - அறநூல்கள் - இனியவை நாற்பது

 

அறநூல்கள்

இனியவை நாற்பது (Source TN Textbook)

 

                                    குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே

                                    கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே

                                  மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்

                                 திருவுந்நீர் வின்றேல் இனிது.

 

ஆசிரியர்-பூதஞ்சேந்தனார்

பாடல்-40

பொருள்-அறம்

சமயம்-சைவம்

காலம்-கி.பி.2ம் நூற்றாண்டு

 

பாடல் விளக்கம்:

 

குழந்தை நோயில்லாமல் வாழ்வது இனியது,யாருக்கும் பயப்படாமல் பேசும் கல்வி இனியது,பெருமை உடையவரிடம் சேரும் செல்வம் அழியாது நிலைத்து இருப்பது இனியது.

 

நூற்குறிப்பு:

 

இதன் ஆசிரியர் பூதஞ்சேந்தனார்.இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.இனிய நாற்பது கருத்துகளை தருவதால் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது.இதின் ஒவ்வொரு பாடலிலும் மூன்று அல்லது நான்கு கருத்துகள் இனிமையாக வெளிப்படுகிறது.

No comments:

Post a Comment