Latest Government Jobs and updates

Wednesday

TNPSC Tamil - எட்டுத்தொகை - ஐங்குறுநூறு

 

எட்டுத்தொகை - ஐங்குறுநூறு  (Source TN Textbook)

ஆடுகம் விரைந்தே

காயா கொன்றை நெய்தல் முல்லை

போதவிழ் தளவொடு பிடவலர்ந்து கவினிப்

பூவணி கொண்டன்றால் புறவே

பேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே

பாடல் விளக்கம்:

    [பொருளீட்டுவதற்காக வெளியூர் சென்றான் தலைவன். அவன்,தான் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்ற காலத்திற்கு முன்னரே வீட்டிற்குத் திரும்புகிறான். வருவதாகக் கூறிச் சென்ற மழைக்காலம் முடியும் முன்னே வந்துவிட்டதனை உணர்த்த நினைக்கிறான்.] பெரிய அழகிய கண்களையுடையவளே! அழகிய மாலை நேரத்தில் முல்லை நிலத்தில் காயா, கொன்றை, நெய்தல், முல்லை, செம்முல்லை, பிடவம் ஆகிய மலர்கள் பூத்திருக்கின்றன. அப்பூக்களைப் பார்த்து மகிழ்ந்து ஆட, ‘விரைந்து வா’ என்று தலைவன் தன் தலைவியை அழைக்கிறான்.

No comments:

Post a Comment