Latest Government Jobs and updates

Monday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 7 - செய்யுள்

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

 6ம் வகுப்பு

           இயல் 7

செய்யுள்   (Source TN Textbook)

திருக்குறள்

இனியவைகூறல்

 (இனிமை பயக்கும் சொற்களைப் பேசுதல்)

 

                            அறத்துப்பால்

 

                              அதிகாரம்(10)

 

                            அறம்-இல்லறவியல்

 

1.இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

விளக்கம்: அன்பு நிறைந்து பேசுபவரின் வாய் சொற்கள் வஞ்சனை இல்லாது இருக்கும்.

 

2.அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்.

விளக்கம்: ஒருவருக்கு மனம் விரும்பி பொருள்களை கொடுத்து மகிழ்வதை விட முகம் மலர்ந்து அவர்களிடம் பேசுவது நல்ல மகிழ்ச்சியை தரும்.

 

3.முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்

இன்சொ லினதே அறம்.

விளக்கம்: தன்னை பார்க்க வருவோரை கண்டவுடன் முகம் மலர்ந்து இனிய சொற்களை பேசுவதே சிறந்த அறமாகும்.

 

4.துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

விளக்கம்: எல்லாரிடமும் இனிய சொற்களை பேசுவதால் துன்பம் என்னும் வறுமை தம்மை அணுகாது.

 

5.பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற.

விளக்கம்: பிறரிடத்தில் பணிவாகவும் இனிய சொற்களை பேசுவதும் உண்மையான அணிகலன்கள் ஆகும்.வேறு எந்த அணிகலன்களும் அழகை தராது.

 

6.அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்.

விளக்கம்: பிறர்க்கு நன்மை பயக்கும் இனிய சொற்களை பேசுவது சிறந்த அறமாகும்.

 

7.நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்.

விளக்கம்: பிறருக்கு நன்மை பயக்கும் இனிய சொற்களை பேசுவது இன்பத்தை தரும்.

 

8.சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பந் தரும்.

விளக்கம்: பிறருக்கு துன்பம் விளைவிக்கும் சொற்களை பேசாது இனிய சொற்களை பேசுபவனின் வாழ்வு இப்பிறவியிலும் மறுபிறவியிலும் இன்பத்தை கொடுக்கும்.

 

9.இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது.

விளக்கம்: இனிய சொல் பேசுவது இன்பத்தை தரும் என்று அறிந்தும்,பிறரிடம் கடுஞ்சொற்களை பேசுவது தவறான செயல் ஆகும்.

 

10.இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

விளக்கம்: பிறரிடம் பேசும் போது இனிய சொற்களை பேசாது துன்பம் தரும் கடுஞ்சொற்களை பேசுவது கையில் கனியை வைத்து கொண்டு காய்களை உண்பது போன்றது ஆகும். 

No comments:

Post a Comment