Latest Government Jobs and updates

Monday

TNPSC Tamil study material Part-B Thirukkural


                         கேள்வி

       (சான்றோர் உரைகளைக் கேட்டல்)

                           பொருட்பால்

                             அதிகாரம்(42)

                            அறம்: அரசியல்

  1. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
விளக்கம்: செல்வங்களுள் சிறப்பான செல்வம் கேள்விச் செல்வமாகும்.அதுவே எல்லா செல்வத்தை விடவும் சிறந்த செல்வமாகும்.

2.செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
விளக்கம்: வயிற்று பசியை போக்க உணவு தேவை.அதுபோல அறிவு என்னும் பசியை போக்க கேள்வி என்னும் உணவு தேவை.

3.செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
விளக்கம்: செவி உணவாகிய கேள்வியினை உடையவர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தால்,அவரை தேவர்களோடு ஒப்புவித்து மதிப்பர்.

4.கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்(கு)
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
விளக்கம்: நூல்களை கற்கவில்லை என்றாலும் கற்றவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.அது நம் வாழ்வில் தளர்ச்சி வரும் போது சிறந்த துணையாக இருக்கும்.

5.இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.
விளக்கம்: ஒழுக்கம் உடையவர்களின் சொற்கள் வழுக்கல் உடைய நிலத்தில் நடப்போர்க்கு உன்றுகோல் போல உதவி புரியும்.

6.எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
விளக்கம்: நல்லோர் சொல்லும் செய்தி சிறிதளவாக இருந்தாலும்,அது அளவுக்கு மீறிய பெருமையைத் தரும்.


7.பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்(து)
ஈண்டிய கேள்வி யவர்.
விளக்கம்: கேள்வி அறிவு உள்ளவர்கள் ஒற்றை தவறாக உணர்ந்தாலும் அறநெறிக்கு மாறாக பேச மாட்டார்கள்.

8.கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
விளக்கம்: கேள்வியால் துளையிடப்படாத காது கேட்கும் விருப்பம் இல்லையென்றால் செவிட்டுத் தன்மைக் கொண்ட காதாகக் கருதப்படும்.

9.நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.
விளக்கம்: நுட்பமான கருத்துக்களைக் கேட்டு அறியாதவர் நல்ல சொற்களைப் பேசுதல் அரிது.

10.செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
விளக்கம்: செவியால் உணரகூடிய சுவையை உணராது,வாய் சுவையை மட்டும் கொண்டவர்களை மக்கள் என்று கருதமாட்டார்கள்,மாக்கள் என்றே கருதுவர்.  

Friday

TNPSC Tamil study material part-b Thirukkural


                                கல்வி

                 பொருட்பால்

                      அதிகாரம் (40)

                                அறம்: அரசியல்

1.கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
விளக்கம்: நூல்களை குற்றமறப் படிக்க வேண்டும். படிப்புக்கு தக்கவாறு நன்னெறியில் நிற்க வேண்டும்.கற்கும் முறையில் நடக்க வேண்டும்.

2.எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப  வாழும் உயிர்க்கு
விளக்கம்: எண் எனப்படும் கணக்கும்,சொல்லும் பொருளும் தரும் இலக்கியமும்,மனிதனுக்கு இரு கண் போன்றது.

3.கண்உடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்உடையர் கல்லா தவர்.
விளக்கம்: படித்த அறிவாளிகளே கண்களை உடையவர்கள்,படிக்காத அறிவிளிகள் முகத்தில் இரு புண்ணுடையவர்கள்.

4.உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
விளக்கம்: புலவர்களுடன் பேசும் போது மகிழ்ச்சியாக இருப்பதும், அவரை விட்டு பிரியும் போது இவரை இனி எப்பொழுது காண்போம் என எண்ணுவதும், புலவர்களின் தொழிலாகும்.

5.உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்.
விளக்கம்: செல்வர்கள் முன் ஏழைகள் பணிவாக நடந்து கொள்வது போல கற்றவர்கள் முன் மக்கள் பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.கல்லாதவர் செல்வம் இருந்தும் இல்லாதவராக கருதப்படுவர்.

6.தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.
விளக்கம்: மணல் நிறைந்த இடத்தில் தோண்ட நல்ல தண்ணீர் கிடைக்கும்.அதுபோல நூல்களைக் கற்கக் கற்க அறிவு வளரும்.

7.யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
விளக்கம்: கல்வி கற்றவனுக்கு எந்த நாடும் தன் நாடாம்,எந்த ஊரும் தன் ஊராம்.அப்பிடியிருக்க,சிலர் சாகும் வரை கல்வி கற்காமல் இருப்பது ஏன் என தெரியவில்லை.

8.ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
விளக்கம்: ஒரு பிறப்பில் படிக்கு படிப்பு,ஏழேழு பிறவிக்கும் உதவும் என்பதே.

9.தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
விளக்கம்: கல்வியால் உலகம் இன்பம் அடையும்.அதைக் கண்டு கற்றவர்கள் மேலும் கல்வி கற்க விரும்புவர்.

10.கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
விளக்கம்: ஒருவனுக்கு அழியாத செல்வம் கல்வி ஆகும்.மற்ற செல்வங்கள் எல்லாம் அழிந்து போகும்.கல்வியே சிறந்த செல்வம் ஆகும்.

TNPSC Tamil study material part-b Thirukkural


                    பண்புடைமை

                                பொருட்பால்

                                       அதிகாரம்(100)

                           பொருள்: குடியியல்

1.எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
விளக்கம்: எல்லாரிடமும் எளிமையாகப் பழகினால் பண்புடைமை என்னும் நன்னெறியை அடைவது எளிது.

2.அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
விளக்கம்: அன்புடைமையும் நல்இலக்கணமும் உடைய குடியில் பிறந்தவர்கள் பண்புடையவர்களாவர்.

3.உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
விளக்கம்: உயிரோடு பொருந்திய பண்பினை கொண்டிருப்பது உண்மையான ஒப்பாகும்.

4.நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
விளக்கம்: நேர்மையையும் நன்மையையும் கொண்டு பிறர்க்கு உதவும் பண்பை உலகம் விரும்பி போற்றும்.

5.நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
விளக்கம்: விளையாட்டாக ஒருவரை இகழ்ந்து பேசுவது துன்பத்தை தரும்.பிறர் துன்பத்தை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிருப்பினும் நல்ல பண்புகள் இருக்கும்.

6.பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
விளக்கம்: உலகம் பண்புடையவர்களாலே இயங்கி வருகிறது.அஃது இல்லையெனில் மண்ணோடு மண்ணாகி மறைந்து போகும்.

7.அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்(பு) இல்லா தவர்.
விளக்கம்: அரம்போன்ற அறிவுடையாராயினும் மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் ஓரறிவு கொண்ட மரத்தை போன்றவர் ஆவர்.

8.நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை.
விளக்கம்: தம்மோடு நட்புக் கொள்ளாது தீமை செய்பவரிடத்திலும் பண்புடையவராய் நடந்து கொள்ளாமை மிகவும் இழிவான செயலாகும்.

9.நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்.
விளக்கம்: யாரிடமும் பழகிச் பேச இயலாதவருக்கு இவ்வுலகம் பட்டப் பகலிலும் இருள் நிறைந்திருப்பாதாகவே தோன்றும்.

10.பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யாலதிரிந் தற்று.
விளக்கம்: பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம் யாருக்கும் பயன்படாது போனால்,நல்ல பால் கலத்தின் குற்றத்தால் திரிவது போன்றது.

TNPSC Tamil Study Material - Part B- Thirukkural

திருக்குறள் தொடர்பான செய்திகள்


               அன்புடைமை

                        அறத்துப்பால் 

                         அதிகாரம்(8)

                   அறம்: இல்லறவியல்

1.அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
விளக்கம்: அன்புக்குரியவர்களின் துன்பத்தை பார்த்து நம் கண்களில் கண்ணீராக வெளிபடுவது அன்பு.

2.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
விளக்கம்: அன்பு இல்லாதவர் எல்லா பொருளும் தனக்குரியது என்று எண்ணுவர்.அன்புஉடையவர் பிறர் துன்பம் அடையும் போது தன் உயிரையும் கொடுத்து உதவுவார்.

3.அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
விளக்கம்: உயிர் கொண்ட உடம்பின் பயன் பிறரிடம் அன்பு செலுத்தவே.அவ்வன்பை நம் வாழ்வில் வளர்ந்து கொள்ள வேண்டும்.

4.அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.
விளக்கம்: அன்பு என்பது பிறரை நண்பராக்க உதவும்.அந்த அன்பானது இந்த உலகத்தையே தன்வயமாக்கும்.

5.அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
விளக்கம்: உலகத்தில் இன்பமும் சிறப்பும் பெற்று ஒருவன் வாழ்வது அன்பின் பயனே ஆகும்.

6.அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும்  அஃதே துணை.
விளக்கம்: அன்பு என்பது பகையை வெல்வும்,நட்பை வளர்க்கவும் உதவுகிறது.

7.என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
விளக்கம்: எலும்பு இல்லாத புழுக்கள் வெயிலில் அழிவது போல அன்பில்லாதவர்களும் அழிவர்.

8.அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று.
விளக்கம்: பாலை நிலத்தில் வாடிபோன மரம் தளிர்க்காது.அதுபோல அன்பு இல்லாத மனிதர் வாழ்த்தும் வாழாதவர்களாக கருதப்படுவர்.

9.புறத்துறப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
விளக்கம்: அன்பு இல்லாதவர்களுக்கு மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ஆகியவை இருந்தும் பயன்இல்லை என்பதாம்.

10.அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
விளக்கம்: அன்பு உடையவரை உயிர் உள்ளவராக கருதுவர்.அன்பு இல்லாதவரை பிணமாக கருதுவர்.