Latest Government Jobs and updates

Thursday

TNPSC Tamil study material part-B Thirukkural


        பெரியாரைத் துணைக்கோடல்

           (நன்னெறியில் செலுத்தும்   பேரறிவுடையாரைத் துணையாகக் கொள்ளுதல்)

                       பொருட்பால்

                  அதிகாரம்(45)

                அறம்-அரசியல்

1.அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
விளக்கம்: அறிவிலும்,ஒழுக்கத்திலும்,வயதிலும் பெரியவர்களின் நட்பை ஏற்று கொள்ள வேண்டும்.

2.உற்றுநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
விளக்கம்: தமக்கு வந்த துன்பத்தை நீக்கி துன்பம் வராதவாறு காக்கும் திறமையுடையவரை நட்பாக்கி கொள்ள வேண்டும்.

3.அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
விளக்கம்: அறிவுமிக்க பெரியோர்களை உறவாக கொள்ள வேண்டும்.அதுவே ஒருவன் பெற வேண்டிய பேறுகளுள் அரிய பேறு ஆகும்.

4.தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.
விளக்கம்: நம்மை விட பெரியவர்களை நட்பாக்கி கொள்ள வேண்டும்.அதுவே சிறந்த வலிமையாகும்.

5.சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழந்து கொளல்.
விளக்கம்: தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் பெரியயோர்களை கண்ணாக கொண்டு நடப்பதால் மன்னனுக்கு அரசபாரம் எளிதாக தோன்றும்.

6.தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
விளக்கம்: பெரியவர்களின் துணை கொண்டு நடப்பவர்களுக்கு பகைவர்களால் எந்த தீங்கும் வராது.

7.இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
விளக்கம்: தவறுகளை சுட்டிகாட்டும் பெரியவர்களைத் துணையாகக் கொண்டு வாழ்பவர்களை அழிக்க எவருமிலர்.

8.இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்.
விளக்கம்: தவறுகளை சுட்டி காட்டும் பெரியவர்களின் துணையை மதிக்காதவன் பகைவர் இல்லை என்றாலும் தானே அழித்து விடுவான்.

9.முதலிலார்க்(கு) ஊதிய மில்லை மதலையாம்
சார்பிலார்க் கில்லை நிலை.
விளக்கம்: முதலீடு இல்லாத வணிகருக்கு எந்த ஊதியமும் இல்லை,அதுபோல பெரியோர் துணையில்லாதவர்க்கு எந்த நன்மையும் இல்லை.

10.பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
விளக்கம்: பெரியோர்களின் நட்பை கைவிடுவது பலரை பகைத்து கொள்வதை விட பலமடங்கு தீமை உடையது ஆகும்.

No comments:

Post a Comment