Latest Government Jobs and updates

Wednesday

TNPSC Tamil - திருக்குறள் - அறிவு

 திருக்குறள்

அறிவுடைமை (Source TN Textbook)

      பொருட்பால்

அதிகாரம்(43)

அறம்- அரசியல்

 1.அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.

விளக்கம்: அறிவு என்பது அழிவிலிருந்து நம்மை காக்கும் கருவியாகும்.பகைவர்களால் அழிக்க முடியாத கருவியாகும்.

 

2.சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ

நன்றின்பா லுய்ப்பது தறிவு.

விளக்கம்: மனம் போகும் பாதையில் தானும் போகாமல்,தீமையை விட்டு நன்மையானவற்றை செய்வதே சிறந்த அறிவாகும்.

 

3.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

விளக்கம்: ஏதாவது ஒரு செய்தியை யார் கூறினாலும்,அச்செய்தியின் கருத்தை ஆராய்ந்து அறிவது அறிவு ஆகும்.

 

4.எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்ப தறிவு.

விளக்கம்: தான் சொல்லும் கருத்தை மற்றவர்கள் எளிதாக புரியவும்,மற்றவர்கள் சொல்லும் கருத்தை புரிந்து கொள்வதும்,அறிவுடையார்களின் செயலாகும்.

 

5.உலகந் தழீஇயது தொட்பம் மலர்தலுங்

கூம்பலு இல்ல தறிவு.

விளக்கம்: உலகத்தை புரிந்து நடப்பதே சிறந்த அறிவு.தெளிவும்,கலக்கமும் மாறிமாறி வந்தாலும் ஒரே சீராக இருப்பதே அறிவு.

 

6.எவ்வ துறைவ துலக முலகத்தோ

டவ்வது துறைவ தறிவு.

விளக்கம்: உலக்கத்தோடு ஒத்து நடப்பதே அறிவாகும்.எனக்கு எல்லாம் தெரியும் என்று யார் கூறுவதையும் கேட்கமல் இருந்தால் பாவமும் பழியும் வந்து சேரும்.

 

7.அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்.

விளக்கம்: அறிவுடையவர்கள்,எதிர்காலத்தில் வர போவதை அறிந்து செயல்படுவர்.அறிவில்லாதவர் பின்விளைவை நோக்காது செயல்படுவர்.

 

8.அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ

தஞ்சல் அறிவார் தொழில்.

விளக்கம்: அஞ்சத்தக்கத்தைக் கண்டு அஞ்சுவது அறிவுடையார்களின் செயலாகும்.அஞ்சாமல் இருப்பது அறிவில்லாதவர்களின் செயலாகும்.

 

9.எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு கில்லை

அதிர வருவதோர் நோய்.

விளக்கம்: பின்வர போவதை முன்னே அறிந்து தன்னை காத்து கொள்பவர்கள் அறிவுடையவர்கள்,அவர்களுக்கு எந்த துன்பமோ நோயோ வராது.

 

10.அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்

என்னுடைய ரேனும் மிலர்.

விளக்கம்: அறிவுடையவர் எல்லாம் உடையவராக கருதப்படுவர்,அறிவு இல்லாதவரிடம் எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லாதவராகவே கருதப்படுவர்.

No comments:

Post a Comment